×

கிராமத்திற்குள் நுழைய முயன்ற ஒற்றை யானை காட்டுக்குள் விரட்டியடிப்பு குடியாத்தம் அருகே விவசாய நிலங்கள் வழியாக

குடியாத்தம், மே 3: குடியாத்தம் அருகே விவசாய நிலங்கள் வழியாக கிராமத்திற்குள் நுழைய முயன்ற ஒற்றை யானையை வனத்துறையினர் மீண்டும் காட்டுக்குள் விரட்டியடித்தனர். குடியாத்தம் வனப்பகுதி அருகிலுள்ள குடியாத்தம் அடுத்த தனகொண்டபள்ளி, சைனாகுண்டா, மோர்தானா, வீரிசெட்டிபள்ளி, பரதராமி, கொட்ட மிட்டா, வி.டி பாளையம், கதிர்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதம் செய்து வருகிறது. இதனை விரட்டும் பணியில், வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை அனுப்பு கிராமத்தில் ஒற்றை காட்டு யானை பிளிறும் சத்தத்துடன் விவசாய நிலத்திற்குள் நுழைய முயற்சி செய்தது. தகவல் அறிந்த வன ரோந்து பணியில் இருந்த வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். யானைகளை நிரந்தரமாக விரட்டி அடிக்க குடியாத்தம் பகுதிக்கு கும்கி யானையை கொண்டு வர வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கிராமத்திற்குள் நுழைய முயன்ற ஒற்றை யானை காட்டுக்குள் விரட்டியடிப்பு குடியாத்தம் அருகே விவசாய நிலங்கள் வழியாக appeared first on Dinakaran.

Tags : Kudiatham ,Gudiatham ,Gudiyatham ,Thanakondapalli ,Chinakunda ,Mordhana ,Veerishettipalli ,Baradarami ,Kotta Mitta ,VT… ,Dinakaran ,
× RELATED 9 வயது சிறுவன் திடீர் தற்கொலை குடியாத்தம் அருகே அதிர்ச்சி